மத நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

கிருஷ்ணகிரியில் மத நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2021-08-19 14:45 GMT

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மத நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி.

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மத நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சதீஷ் தலைமை வகித்து, உறுதிமொழியை வாசிக்க, அதை அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் திரும்பு கூறி உறுதிமொழி எடுத்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அமீர்பாஷா மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News