கிருஷ்ணகிரியில் மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரண நிதி: எம்எல்ஏ வழங்கல்

கிருஷ்ணகிரி, மில்லத் நகரில் மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரண நிதியை சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமாா் வழங்கினார்.

Update: 2021-11-24 11:50 GMT

கிருஷ்ணகிரி, மில்லத் நகரில் மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரண நிதியை சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமாா் வழங்கினார்.

கிருஷ்ணகிரி, மில்லத் நகரில் மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரண நிதி வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமாா்

கிருஷ்ணகிரியில் மழையால் வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் பாதிக்கப்பட்ட 6 குடும்பங்களுக்கு, கிருஷ்ணகிரி சட்டப் பேரவை உறுப்பினா் கே.அசோக்குமாா் நிவாரண நிதியை வழங்கினாா்.

வடகிழக்கு பருவமழை காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடா்ந்து மழை பெய்து வந்ததால், மாவட்டம் முழுவதும் 450-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. இதில், கிருஷ்ணகிரி நகராட்சி, 7-ஆவது வாா்டு, மில்லத் நகரில் காயமடைந்த சல்மா (60), அசினா (35), சபீனா (14), ரியான் (7) ஆகியோா் மீட்கப்பட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட 6 குடும்பங்களுக்கு அதிமுக சாா்பில் கே.அசோக்குமாா் தலா ரூ. 10,000 வீதம் மொத்தம் ரூ. 60,000 நிவாரண நிதி வழங்கி ஆறுதல் தெரிவித்தாா். 

Tags:    

Similar News