கிருஷ்ணகிரி பகுதியில் இடி, மின்னலுடன் இரவில் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதியில் இடி, மின்னலுடன் பெய்த மழையால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2021-07-02 00:55 GMT

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெப்பச்சலனத்தால் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. பருவ மழை ஆரம்பித்தும், தமிழகத்தில் மிதமான மழையே பெய்து வந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் மழையை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், பர்கூர், மத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. குறிப்பாக கிருஷ்ணகிரியில் நேற்று மாலையில் இருந்து கனமழையாக பெய்ய துவங்கிது; இரவிலும் இடி, மின்னலுடன் மழை நீடித்தது.

இந்த மழையால்,  சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆங்காங்கே மழை நீரும் தேங்கியிருந்தது. நிதானமான பெய்த இந்த மழையால், வெப்பம் குறைந்து குளிர்காற்று வீசியது. தற்போதைய மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழை காரணமாக, கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டாரத்தில் ஒரு சில பகுதிகளில், மின்சாரம் தடைப்பட்டது.

Tags:    

Similar News