2,298 வாக்குச்சாவடி மையங்களுக்கும் கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள்

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள 2,298 வாக்குச்சாவடிகளுக்கும் கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் அனுப்பி வைக்க நடவடிக்கை

Update: 2021-03-27 11:30 GMT

கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை வளாகத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் 2021 முன்னிட்டு 6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 2298 வாக்குச்சாவடி மையங்களுக்கு கொரோனா நோய்தொற்று பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஜெயசந்திரபானு ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 2298 வாக்குச்சாவடி மையங்களுக்கு மொத்தம் 2298 தெர்மோ ஸ்கேனர், 13,788 (500 மிலி) மற்றும் 22,980 (100 மிலி) கிருமி நாசினிகள், 22,980 முககவசங்கள், 1,37,880 மூன்றடுக்கு முககவசங்கள், 57,450 ஓரடுக்கு முககவசங்கள், 68,940 கையுறைகள், 11,490 எல்டிபிஇ பேக்கேஜ், 2298 டி கட் பேக், 15,98,865 பாலிதீன் கையுறைகள், 27,576 பிபிஇ உபகரணங்கள் ஆகியவற்றை தனித்தனியே தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள், அலுவலர்கள், பணியாளர்கள், முகவர்கள் என அனைவரும் வரும் சட்டமன்ற பொதுத் தேர்தலை பாதுகாப்பான முறையில் சிறப்பாக நடத்திட ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News