பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி : துவக்கி வைத்த அமைச்சர்

குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியினை ககைத்தறித்துறை அமைச்சர் காந்தி பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

Update: 2022-01-04 17:38 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியினை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்..

தமிழர்களின் முக்கிய பண்டிகைகளின் ஒன்றான பெங்கல் பண்டிகை வருகின்ற 14ம் தேதி கொண்டாடப்பட உள்ளது, இந்த நாளில் அனைவரும் சிறப்பாக கொண்டாப்பட வேண்டும் என்பதற்காக அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ஒரு கரும்பு, பருப்பு, வெல்லம் உள்ளிட்ட 21 பொருள்கள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்து இருந்தார்.அதன்படி சென்னையில் பயனாளிகளுக்கு பரிசு தொகுப்பு வழங்கும் பணியினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

இதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரியில் பெங்கள் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடைப்பெற்றது. மாவட்ட ஆட்சியர்ஜெயசந்திரபானுரெட்டி தலமையில் நடைப்பெற்ற இந்த விழாவின்போது காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்டாக்டர் செல்லக் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் மதியழகன், பிரகாஷ், ராமசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட தமிழகை கைத்தறித் துறை அமைச்சர் காந்தி  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 5 லட்சத்து 46 ஆயிரத்து 597 குடும்ப அட்டைதாரர்கள் ஒரு முழு கரும்பு, அரிசி, வெல்லம், முத்திரி, திராட்சை உள்ளிட்ட 21 வகையான பொங்கள் பரிசு தொகுப்பினை வழங்கும் பணியினை தொடங்கிவைத்தார்.

Tags:    

Similar News