பெண்களிடம் லட்சக்கணக்கில் பணம் மோசடி: எஸ்பி., அலுவலகத்தில் புகார்

பெண்களிடம் லட்சக்கணக்கில் பணத்தை வாங்கி இறந்தவரின் மனைவிகளிடம் பெற்றுத்தர வழியுறுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகாரளித்தனர்.

Update: 2021-11-27 11:06 GMT

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்த பெண்கள்.

கிருஷ்ணகிரி பாரதி நகரை சேர்ந்தவர் ஜனகிராமன் இவர் கிருஷ்ணகிரி வனச்சரக அலுவலகத்தில் ஒட்டுனராக பணிபுரிந்து ஓய்வுபெற்றுள்ளார்.

இவர் கிருஷ்ணகிரி, செட்டியம்பட்டி உள்ளிட்ட பல்வேறுப் பகுதி பெண்களிடம் அதிக வட்டி தருவதாகக் கூறி பணம் வாங்கி உள்ளார்.

இந்த நிலையில் ஜனகிராமன் திடிரென காலமானார். இதனால் அதிக வட்டி கிடைக்கும் என நம்பி பணம் கொடுத்த பெண்கள் ஜனகிராமனின் மனைவிகளான விஜயா மற்றும் ராஜ்குமாரி ஆகியோரிடம் கணவர் வாக்கிய பணத்தை கேட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் கணவர் வாங்கிய பணம் எல்லாம் தர முடியாடியாது எனக் கூறி வழக்கறிஞர் மூலம் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளார் அலுவலகத்திற்கு சென்று தங்களிடம் இருந்துவாங்கிய பணத்தினை பெற்றுத்தர வேண்டி கோரிக்கை மனு கொடுத்தனர்.

ஒவ்வொரு பெண்களில் சுமார் ரூ.2 லட்சம் என சுமார் ரூ.40 லட்சம் வரை பணப்பெற்றுவிட்டு அவர் உயிரிழந்துள்ளார், ஆனால் கணவர் வாக்கிய பணத்தை அவரின் மனைவிகளான ஒய்வு பெற்ற மனைவிகளிடம் இருந்து பணத்தினை பெற்று தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

Tags:    

Similar News