கிருஷ்ணகிரியில் ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் தகவல்

வருகிற பிப்ரவரி மாதம் 4ம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

Update: 2021-12-12 15:57 GMT

கிருஷ்ணகிரியில் ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓய்வூதியதாரர்களின் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற பிப்ரவரி மாதம் 4ம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

இந்த ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு சென்னை ஓய்வூதிய இயக்குனர் வருகை தருகிறார். எனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓய்வூதியதாரர்கள் தங்களின் ஓய்வூதியம் தொடர்பான மனுக்களை இரட்டை பிரதியில் (2 ஜெராக்ஸ் காப்பிகள்) வருகிற 31ம் தேதிக்குள் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துளளார்.

Tags:    

Similar News