திமுகவில் இணைந்த தேமுதிகவினர்

கிருஷ்ணகிரியில் செங்குட்டுவன் எம்எல்ஏ. முன்னிலையில் தேமுதிக நகர செயலாளர் தலைமையில் சுமார் 300 பேர் திமுகவில் இணைந்தனர்.

Update: 2021-03-24 14:00 GMT

கிருஷ்ணகிரியில் செங்குட்டுவன் எம்எல்ஏ முன்னிலையில் தேமுதிக நகர செயலாளர் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சுமார் 300க்கும் அதிகமானோர் திமுகவில் இணைந்தனர்.

கிருஷ்ணகிரி தமிழ்நாடு ஓட்டலில், தேமுதிக கிருஷ்ணகிரி நகர செயலாளர் பரந்தாமன் தலைமையில்,  சுமார் 300க்கும் அதிகமானோர் தேமுதிகவில் இருந்து விலகி திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த தேமுதிக நிர்வாகிகளை திமுக நகர செயலாளர் நவாப் வரவேற்றார். இவர்கள் அனைவரும், தேமுதிக நகர செயலாளர் பரந்தாமன் தலைமையில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான செங்குட்டுவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அப்போது அவர்கள் அனைவருக்கும் திமுக துண்டு அணிவித்து வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில், மாவட்ட துணை செயலாளர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, அணிகளின் நிர்வாகிகள் நாராயணமூர்த்தி, அஸ்லாம், துரை(எ)துரைசாமி, ஒசாமா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News