கிருஷ்ணகிரி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சாய்சரண் தேஜஸ்வி நியமனம்!

கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி.யாக, சாய்சரண் தேஜஸ்வி நியமிக்கபட்டுள்ளார்.

Update: 2021-06-06 05:15 GMT

தமிழகத்தில், 27 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி எஸ்.பி.யாக, தேனி மாவட்ட எஸ்.பி.யாக பணியாற்றி வரும் சாய்சரண் தேஜஸ்வி நியமிக்கபட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ள சாய்சரண் தேஜஸ்வி, கடந்த 2014-ல், ஐ.பி.எஸ். தேர்ச்சி பெற்று, திருநெல்வேலி மாவட்டத்தில் 6 மாத காலம் பயிற்சி பெற்றார். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் டி.எஸ்.பியாக பணியை துவங்கினார்.

அங்கிருந்து, சென்னை புளியந்தோப்பு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டு, அங்கு ஒன்றரை ஆண்டு பணியாற்றிய அவர், கடந்த 2019ல், நவம்பர் 6ம் தேதி, தேனி மாவட்ட எஸ்.பி.யாக பதவியேற்றுக் கொண்டார். தற்போது கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News