கிருஷ்ணகிரியில் கொரோனாவால் 288 பேர் பாதிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலியாகினர்; புதியதாக 288 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Update: 2021-06-12 03:07 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று கொரோனாவால் 288 பேர் பாதிக்கப்பட்டனர். 404 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். 2 பேர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 48 வயது பெண், 45 வயது ஆண் ஆகியோர் கொரோனா பாதிப்புடன் கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர்கள் இறந்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 257 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 36 ஆயிரத்து 620 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 33 ஆயிரத்து 930 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். தற்போது 2 ஆயிரத்து 433 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 257 ஆக உள்ளது.

Tags:    

Similar News