கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 103 பேருக்கு கொரோனா - 3 பேர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இன்று ஒரேநாளில் 103 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

Update: 2021-07-01 15:23 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக மாவட்டத்தில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரங்களை, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று ஒரே நாளில் மாவட்டத்தில், 103 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில், மொத்தமாக, 39 ஆயிரத்து 986 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், மாவட்டத்தில் இன்று டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்ட 109 பேர் உட்பட, 38 ஆயிரத்து 641 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது, 1,039 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும், இன்று 3 பேர் உயிரிழந்தனர். அவர்களையும் சேர்த்து, மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 306 ஆக உயர்ந்துள்ளது.

Tags:    

Similar News