கொரோனாவுக்கு ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர், மனைவி, மகன் பலி

கிருஷ்ணகிரியில், கொரோனா தொற்றால் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர், அவரது மனைவி, மகன் ஆகியோர் பலியாகி உள்ளனர்.

Update: 2021-05-10 15:43 GMT

கிருஷ்ணகிரி கட்டிகானப்பள்ளியை சேர்ந்தவர் ரஹ்மான் செரீப். ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். இவரது மனைவி பர்வீன், இவர்களின் மகன் தோபிக் செரீப். கடந்த சில நாட்களுக்கு முன்பு,  இவர்களுக்கு அடுத்தடுத்து காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட உடல் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது.  இதற்காக அவர்கள் மருந்து எடுத்துக் கொண்டனர்.

இந்நிலையில், உடல்நிலை குணமடையாததால் அவர்கள் மூவரும், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் ரஹ்மான் செரீப் முதலில் இறந்தார். பர்வீன், அவரது மகன் தோபிக் செரீப் ஆகியோர்  அடுத்தடுத்து உயிர் இழந்தனர்.

கொரோனா பாதிப்பால், ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிர் இழந்தது,  அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News