ஊரடங்கு தொடர்பான சந்தேகமா? கட்டுப்பாட்டு அறைக்கு 'டயல்' செய்யலாம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஊரடங்கு தொடர்பான சந்தேகங்கள், தகவல்கள் பெற கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.

Update: 2021-04-24 05:15 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஊரடங்கு தொடர்பான சந்தேகங்கள், தகவல்கள் பெற கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 20ம் தேதி முதல்,  இரவு நேர ஊரடங்கும், 
ஞாயிற்று கிழமைகளில் முழுநேர ஊரடங்கும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு தொடர்பாக புலம் யர்ந்த தொழிலாளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் தேவையான தகவல்களை வழங்க, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

எனவே, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள், காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள செயல்படும் சிறப்பு கட்டுப்பாட்டு அறைய்யில் உள்ள தொலைபேசி எண். 04343_234424, செல்போன் எண். 9486589038 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News