கிருஷ்ணகிரியில் கொரோனாவுக்கு ஒரேநாளில் 670 பேர் பாதிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலியான நிலையில், நேற்று ஒரேநாளில் 670 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2021-05-27 05:15 GMT

கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்தவர் 58 வயது ஆண். கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 19-ம் தேதி சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 184 ஆக உள்ளது.
இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 670 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக, தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 817 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 30 ஆயிரத்து 342 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 ஆயிரத்து 396 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். இதுவரை சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 184 ஆக உள்ளது என்று, அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News