கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 26 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2021-09-25 14:45 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இன்று ஒரே நாளில் 26 பேர் கொரோனா தொற்று உறுதியானதுடன், 2 பேர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இன்று ஒரே நாளில் 26 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில், மொத்தமாக, 42 ஆயிரத்து 692 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் இன்று டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்ட 19 பேர் உட்பட, 42 ஆயிரத்து 69 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது, 285 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் மாவட்டத்தில் கொரோனாவால் இன்று 2 பேர் உயிரிழந்தனர். இதனால் மாவட்டத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 338 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News