சொத்து தகராறில் கணவன் மனைவி கொலை : கல்லூரி மாணவர் உட்பட 2 பேர் கைது

கிருஷ்ணகிரியில் சொத்து தகராறில் கணவன் மனைவி கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக போலீசார் கல்லூரி மாணவர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-05-06 04:30 GMT

கிருஷ்ணகிரி வீரப்பன் நகரை சேர்ந்தவர் புகழேந்தி (55).மர வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பப்பி ராணி (45). புகழேந்திக்கும் அவரது அண்ணன் இளங்கோவிற்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

,இந்த நிலையில் இளங்கோவின் மகன்லோகேஷ் (18),ஓசூர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அவரது நண்பர் காவேரிப்பட்டினம் அம்பேத்நகர் பகுதியை சேர்ந்த சதீஷ் (18)ஆகிய இருவரும் இன்று அதிகாலை புகழேந்தி வீட்டிற்குச் சென்று தகராறில் ஈடுபட்டனர்.

அப்போது தகராறில் உச்சக்கட்டம் அடைந்த லோகேஷ் அவரது நண்பர் சதீஷ் ஆகிய இருவரும், புகழேந்தி, பப்பி ராணி ஆகிய இருவரையும் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் இருவரும் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதை தடுக்க முயன்ற புகழேந்தியின் தம்பி கரிகாலன்(50), மனைவி சரசு (40)ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கணவன், மனைவியை கொலைசெய்த லோகேஷ், அவரது நண்பர் சதீஷ் ஆகிய இருவரையும் கிருஷ்ணகிரி நகர போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்து தகராறில் கணவன், மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News