டூ வீலரில் செல்ல அனுமதி: விவசாயிகள் சங்கம் அரசுக்கு கோரிக்கை

ஊரடங்கின்போது விவசாயிகள் டூவீலரில் தடையின்றி செல்ல அனுமதிக்க வேண்டும் என்று, தமிழக அரசுக்கு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2021-05-10 12:58 GMT

ஊரடங்கின் போது, விவசாயிகள் தங்குதடையின்றி விளை பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று, தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 

இது தொடர்பாக, தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ராமகவுண்டர் வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனாவைக் கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. இதில், விவசாய பொருட்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு தடை இல்லை என அரசு அறிவித்துள்ளது.

வீட்டில் இருந்து விவசாய நிலத்திற்கு இரு சக்கர வாகனத்தில்தான் செல்ல வேண்டும். அங்கிருந்து மீண்டும் வீடுவரை டூவீலரில் வர வேண்டும். விளைப் பொருட்களை சந்தையில் விற்று மீண்டும் அதே வாகனத்தில் வீடு திரும்ப வேண்டும். மாங்காய், தேங்காய், காய்கறி, கீரை வகைகள் அறுவடை செய்ய கூலியாட்கள் வாகனத்தில்தான் செல்ல வேண்டும்.

இவர்கள் அனைவருக்கும் பாஸ் வழங்க முடியாது. இதனால் போலீசாருக்கு அறிவுரை வழங்கி, விவசாயி என்று தெரிந்தால் அவரை அனுமதிக்க வேண்டுமென கேட்டுக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News