கிருஷ்ணகிரி: வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க மீண்டும் வாய்ப்பு

கிருஷ்ணகிரியில், வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Update: 2021-06-08 13:00 GMT

இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2017, 2018 மற்றும், 2019 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப்பதிவினை, பல்வேறு காரணங்களால் புதுப்பிக்கத்தவறிய பதிவுதாரர்கள், பணிவாய்ப்பினை பெறும் வகையில்,  மீண்டும் ஒருமுறை புதுப்பித்துக் கொள்ள ஏதுவாக, சிறப்பு புதுப்பித்தல் சலுகையை தமிழக அரசு வழங்கி உள்ளது.

அதன்படி, பதிவுதாரர்கள் கடந்த மே 28 முதல் வரும் ஆகஸ்ட் 27 வரை, மூன்று மாதங்களுக்குள் இணையம் மூலம் தங்கள் பதிவினைப் புதுப்பித்துக் கொள்ளலாம். அவ்வாறு பதிவினை புதுப்பிக்க இயலாத பதிவுதாரர்கள் மேற்குறிப்பிட்ட தேதிக்குள்,  கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்திற்கு, பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்தும் புதுப்பித்துக் கொள்ளலாம்.

இணையம் மூலமாக புதுப்பித்தல் மேற்கொள்ளும்போது, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இணையதள முகவரியை பயன்படுத்தி வரும் ஆகஸ்ட் 27ம் தேதி வரை பதிவுதாரர்கள் தங்களது பதிவினை புதுப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News