கிருஷ்ணகிரியில் மின்வாரிய தொழிற்சங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2021-07-21 13:30 GMT

கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நடந்த ஆர்ப்பாட்டம் 

https://www.instanews.city/preview/story-434890

கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் எதிரில், தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் மின்சார சட்ட திருத்தம் 2021ஐ கைவிட கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச பசவராஜ், சிஐடியூ கருணராநிதி, சம்மேளம் தாவீது, பொறியாளர் சங்கம் சரவணன், ஐக்கிய சங்கம் திருமலைவாசன், அண்ணா தொழிற்சங்கம் நாகராஜ் ஆகியோர் கூட்டு தலைமை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, ஒரே வீதியில் பல தனியார் நிறுவனங்கள் மின் வினியோகத்தில் ஈடுபட்டு மின் வினியோகத்தை நாசம் செய்திடவும்,

அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள மின் கட்டணத்தை நிர்ணயிக்கும் மாநில உரிமை பறித்திடவும், லாபத்தை மட்டுமே கொண்ட சந்தை பொருளாக மின்சாரத்திதை மாற்றிடவும்,

நடைபெறவுள்ள பாராளுமன்ற மழைக்கால கூட்ட தொடரில் சட்டமாக்கவுள்ள மின்சார சட்டம் 2021 மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். 

Tags:    

Similar News