கிருஷ்ணகிரியில் கோவிட் விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் துவக்கிவைப்பு

கோவிட் விழிப்புணர்வு வாகன பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி கொடியசைத்து துவக்கி வைத்தார்

Update: 2022-01-29 05:30 GMT

கோவிட் விழிப்புணர்வு வாகன பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி கொடியசைத்து துவக்கி வைத்தார் 

தர்மபுரி மண்டல மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பில்,  கொரோனா நோய்த்தொற்று தடுப்பது குறித்த மூன்று நாட்கள், கிருஷ்ணகிரி  மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்கள், 7 தாலுக்கா குக்கிராமங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிடப்பட்டது.

இதற்கான விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி கொடியசைத்து துவக்கி வைத்தார். அரசின் வழிகாட்டி நெறிமுறைகள், சமூக இடைவெளி, தடுப்பூசி, குறித்த தகவல்களை வழங்கும் வகையில் வாகன விழிப்புணர்வு அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்த விழிப்புணர்வு நோட்டிஸ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

பின்னர் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துக் கொண்ட உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் கோவிந்தன், மக்கள் தொடர்பு கள அலுவலர் பிபின் எஸ் நாத் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

Tags:    

Similar News