தூய்மையான கிராமம்: விழிப்புணர்வு ஏற்படுத்தும் எல்இடி வாகனம்

தூய்மையான கிராமம் குறித்து குறும்படம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் எல்இடி வாகனம் கொடியசைத்து துவக்கி வைப்பு.

Update: 2021-09-15 14:45 GMT

விழிப்புணர்வு ஏற்படுத்தும் எல்இடி வாகனத்தை ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பெத்ததாளப்பள்ளி ஊராட்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் 75வது சுதந்திர தின திருவிழா சுதந்திரத் திருநாள் அமுத பெருவிழாவை முன்னிட்டு, தூய்மை பாரத இயக்கம் சார்பில், தூய்மையான சுகாதாரமான கிராமம் குறித்து குறும்படம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் எல்இடி வாகனத்தை, ஊரக வளர்ச்சி முகாமை திட்ட இயக்குநர் மலர்விழி கொடியசைத்து துவக்கி வைத்து, பார்வையிட்டார்.

இது குறித்து அவர் கூறுகையில், சுகாதாரமான கிராமம், தூய்மையான இந்தியா என்ற இலக்கினை அடைய கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், கிருஷ்ணகிரி  மாவட்டத்தில் வருகிற அக்டோபர் 2ம் தேதி வரை மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்களில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன எல்இடி வாகனம் மூலம் திட மற்றும் திரவு கழிவு மேலாண்மை, மலக்கசிடு மேலாண்மை, நெகிழி கழிவு மேலாண்மை குறித்தும், அனைத்து ஊராட்சிகளிலும் கழிவுநீர் மேலாண்மை குறித்து பல்வேறு விழிப்புணர்வு குறும்படங்கள் ஒளிபரப்பப்பட உள்ளது என்றார்.

Tags:    

Similar News