ஆதரவற்ற சடலத்தை நல்லடக்கம் செய்த அறம் சிகரம் அமைப்பினர்

கிருஷ்ணகிரியில், ஆதரவற்ற சடலத்தை உரிய சடங்குகள் செய்து, அறம் சிகரம் தொண்டு அமைப்பினர், நல்லடக்கம் செய்தனர்.

Update: 2021-05-12 13:46 GMT

கிருஷ்ணகிரி, சேலம் மேம்பாலம் அருகே அறம் சிகரம் தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்ககின் போது, இந்த அமைப்பினர் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உண்ண உணவு என பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், கோவிட் இரண்டாம் அலையிலும், அறம் சிகரம் தொண்டு அமைப்பு சார்பில்  பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. அவ்வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார்.
அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியாமல் இரண்டு நாட்களாக ஆதரவற்றா நிலையில் இருந்து வந்த  நிலையில், காவல்துறையினர் இன்று அறம் சிகரம் தொண்டு நிறுவன நிறுவனர் டாக்டர் கோபிநாத்திடம்,  உடலை ஒப்படைத்தனர்.
இதனை அடுத்து. கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மேம்பாலம் அருகே உள்ள நகராட்சி மயானத்தில் உரிய சடங்குகளுடன் பூ, மாலை வைத்து உடலை நல்லடக்கம் செய்யப்பட்டது.

Tags:    

Similar News