பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது & ரூ. 3,850 பறிமுதல்

மாவட்டத்தில் ஒரே நாளில் பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது & ரூ. 3,850 பறிமுதல்

Update: 2021-04-29 03:15 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை போலீஸ் எஸ்.ஐ சந்துரு மற்றும் போலீசார், பஞ்சேஸ்வரம் பஸ் ஸ்டாப் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த ஒன்னுப்பள்ளி வெங்கடசாமி, பஞ்சேஸ்வரம் சிவானந்தா, கொரட்டகிரி சந்திரப்பா ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருநத பணம் ரூ. 150ஐ பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போல் ஊத்தங்கரை போலீஸ் எஸ்எஸ்ஐ தேவன் மற்றும் போலீசார், பாம்பாறு அணை அருகே ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த மாரம்பட்டி பிரசாந்த், கணேசன்ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த பணம் ரூ. 300ஐ பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போல், கந்திகுப்பம் போலீஸ் எஸ்.ஐ சிவக்குமார் மற்றும் போலீசார் பிஆர்ஜி மாதேப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள ஒரு கோவில் அருகில் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த அதே ஊரை சேர்ந்த சண்முகம், முருகன், ராமசாமி ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த பணம் ரூ. 3,400ஐ பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவ்வாறு நேற்று ஒரே நாளில் பணம் வைத்து சூதாடியதாக மாவட்டத்தில் 8 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து பணம் ரூ.3,850ஐ பறிமுதல் செய்துள்ளனர்.

Tags:    

Similar News