கிருஷ்ணகிரி அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான 4ம் கட்ட கலந்தாய்வு
கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான நான்காம் கட்ட கலந்தாய்வு இன்று நடைபெறுகிறது.
இது குறித்து கல்லூரி முதல்வர் அனுராதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் 2021-22ம் கல்வியாண்டிற்கான இளங்கலை மற்றும் இளமறிவியல் பாடப்பிரிவுகளில் சேர மாணவ, மாணவிகளுக்கு கூடுதல் இடங்கள் மற்றும் காலியாகவுள்ள இடங்களுக்கான நான்காம் கட்ட கலந்தாய்வு வருகிற 14ம் தேதி நடைபெறுகிறது.
இளங்கலை (பி.ஏ., பி.காம்., பி.பி.ஏ.,) பாடப்பிரிவுகளுக்கான கட்டணமாக ரூ.2175ம், இளமறிவியல் (பி.எஸ்சி.,) பாடப்பிரிவுகளுக்கான கட்டமணமாக ரூ.2195ம் மாணவர் சேர்க்கை கட்டணமாக செலுத்த வேண்டும். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் கல்லூரி முதல்வர் அனுராதா தெரிவித்துள்ளார்.