கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று 497 பேருக்கு கொரோனா
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 497 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்
தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 497 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 130 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 20 ஆயிரத்து 235 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 ஆயிரத்து 355 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 3 ஆயிரத்து 728 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 152 ஆக உள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.