கிருஷ்ணகிரி அருகே பெரியார் சிலைக்கு தீ வைப்பு

Update: 2021-03-07 06:45 GMT

கிருஷ்ணகிரி அருகே பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததை கண்டித்து பொதுமக்கள் மற்றும் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கிருஷ்ணகிரி குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் கத்தாளமேடு என்ற பகுதியில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் இன்று அதிகாலை தீ வைத்துள்ளனர். சிலையின் மீது டயரை போட்டு அதற்கு தீ வைத்துள்ளனர். இதுகுறித்து அறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் திராவிடர் கழகத்தினர் சிலை முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பெரியார் சிலையை அவமதித்து தீ வைத்த மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த மகாராஜகடை இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் உடனடியாக பெரியார் சிலை மீது தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தார். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் குற்றவாளிகளை விரைந்து கைது செய்வதாக உறுதியளித்துள்ளார்.

Tags:    

Similar News