கன்னியாகுமரி அருகே அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்த கூலி தொழிலாளி பலியானார்
குமரியில் மின் கம்பியை மிதித்த கூலி தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
கன்னியாகுமரி மாவட்டம், பழத்தோட்டம் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த கூலித்தொழிலாளி உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் பழத்தோட்டம் அருகே பாலசுப்ரமணியம் பகுதியை சேர்ந்தவர் வேலையா(65), கூலித் தொழிலா ளியான இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.இந்நிலையில் மாதவபுரம் பகுதியில் உள்ள டீக்கடைக்கு வேலையா டீ குடிக்க சென்றுள்ளார். அந்த பகுதியில் மழை காரணமாக சாலையில் தண்ணீர் தேங்கி இருந்த நிலையில் அதில் மின்சார கம்பியும் அறுந்து விழுந்து கிடந்ததுள்ளது.இ தனை பார்க்காமல் நடந்து சென்ற போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறி சென்றுவிட்டனர். இதனை தொடர்ந்து அங்கு வந்த கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் தலைமையிலான போலீசார் சடலத்தை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.