தட்டுப்பாடின்றி மருந்துகள் வழங்க வேண்டும்: தளவாய்சுந்தரம் M.L.A
அரசு மருத்துவமனைகளில் தட்டுப்பாடின்றி மருந்துகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - தளவாய்சுந்தரம் M.L.A
கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம், மற்றும் அதிமுக நிர்வாகிகள் இன்று மரியாதை நிமித்தமாக மாவட்ட ஆட்சியர் அரவிந்தை சந்தித்தனர். அப்போது மாவட்ட ஆட்சியரிடம் கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க அனைத்து கிராமங்களிலும் கிருமி நாசினி அடிக்க வேண்டும்
அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு தட்டுப்பாடின்றி உணவு மற்றும் மருந்து மாத்திரைகள் வழங்க நடவடிக்கை வேண்டும். தொடர்ந்து உணவு மற்றும் மருந்து வழங்குவதில் குறைபாடுகள் இருந்தால் அதுகுறித்து தெரியப்படுத்தினால் அதனை புதிய அரசிடம் தெரிவிப்போம் என்று அவர் கூறினார்.