தந்தையின் நினைவிடத்தில் குமரி எம்.பி மாலை அணிவித்து அஞ்சலி

Update: 2021-05-05 08:00 GMT

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி இடைத் தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் விஜய் வசந்த், அகஸ்தீஸ்வரத்தில் உள்ள அவரது தந்தையும், மறைந்த குமரி பாராளுமன்ற உருப்பினருமான வசந்தகுமார் நினைவிடத்தில் மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அப்போது தந்தையின் வழியில் மக்களுக்கான பணியை சேவை மனப்பான்மையுடன் தன்னை அர்ப்பணித்து பணியாற்றுவேன் என கூறிய எம்.பி.விஜய் வசந்த் குமரிமாவட்ட மக்களுக்கு தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.

நிகழ்வின் போது குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன், மாநில காங்கிரஸ் கட்சியின் செயலாளர் வக்கீல் சீனிவாசன், வட்டார தலைவர் முருகேசன், அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் பொன்னம்பெருமாள் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News