முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீட்டில் சோதனை - குமரி அதிமுக கண்டனம்

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீட்டில் நடைபெற்ற சோதனைக்கு கன்னியாகுமரி மாவட்ட அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

Update: 2021-08-11 13:45 GMT

பைல் படம்

தமிழக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனைக்கு குமரிமாவட்ட அதிமுக கண்டனம் தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக குமரிமாவட்ட அதிமுக செயலாளர் அசோகன், முன்னாள் அமைச்சர் பச்சைமால் ஆகுயோர் கூறும் போது.

இந்த சோதனை திமுக அரசின் இயலாமையை வெளி காட்டுவதாகவும், தமிழக மக்களுக்கு ஒன்றுமே செய்ய இயலாத திமுக பழிவாங்கும் நடவடிக்கையை கையில் எடுத்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

காழ்ப்புணர்ச்சி காரணமாக அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக இதை பார்ப்பதாகவும், அதிமுக செல்வாக்குடன் திகழும் இடத்தில் அந்த செல்வாக்கை கெடுக்கும் வகையில் திமுக செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.

மேலும் இது போன்ற செயல்களை திமுக அரசு நிறுத்த வில்லை என்றால் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும் நிலை வரும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News