குமரி அரசு பள்ளியில் உணவு திருவிழா: கவனத்தை ஈர்த்த பள்ளி மாணவிகள்
குமரி அரசு பள்ளியில் நடைபெற்ற உணவு திருவிழாவில் பள்ளி மாணவிகள் அனைவரின் கவனத்தை ஈர்த்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் அமைந்துள்ள கவிமணி தேசிய விநாயகம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்றது.
தற்போது உள்ள காலகட்டத்தில் ஆரோக்கியமற்ற உணவுகளை விட்டுவிட்டு, ஆரோக்கியமான பாரம்பரிய உணவுகளை உன்ன வேண்டுமென்ற விழிப்புணர்வோடு இந்த பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற்றது.
இந்த உணவு திருவிழாவினை கன்னியாகுமரி மாவட்ட கல்வி அதிகாரி தொடங்கி வைத்தார், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு விதவிதமாக, பாரம்பரிய உணவுகளை செய்து அசத்தினர்.
இந்தப் பாரம்பரிய உணவுகள் அங்கு வந்த பார்வையாளர்களை கவர்ந்து ஈர்க்கும் வகையில் அமைந்தது.