கன்னியாகுமரி மாவட்டத்தில் கடற்கரை கிராம பகுதிகளில் மீன்வளத்துறை அமைச்சர் ஆய்வு.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடற்கரை கிராம பகுதிகளில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2021-07-18 11:30 GMT

மீனவ கிராமங்களில் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் மனோ தங்கராஜ் ஆய்வு மேற்கொண்டனர்.

 தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

கன்னியாகுமரி, ராஜாக்கமங்களம், தேங்காய்பட்டணம் உட்பட மாவட்டம் முழுவதும் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் பல்வேறு பகுதிகளில் மீனவர்களை சந்தித்து குறைகளை கேட்டரிந்தார்.

அமைச்சருடன் தமிழக தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மீன்வளத்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News