கன்னியாகுமரி மாவட்டத்தில் நீதிமன்றத்தை ஏமாற்றிய வாரண்ட் குற்றவாளி போலீசில் பிடிபட்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல வழக்குகளில் தொடர்புடைய வாரண்ட் குற்றவாளிகளை விரைந்து பிடித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்பி., பத்ரி நாராயணன் போலீசாருக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட வாரண்ட் குற்றவாளிகளை பிடிக்கும் பணியில் தீவிரமாக போலீசர் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் நாகர்கோவில் கோட்டார் இளங்கடை பகுதியை சேர்ந்த மனோகரன் (எ) உஸ்மான் என்ற வாரண்ட் குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜராகாமல் ஏமாற்றி வந்த நிலையில் போலீசார் அவரை தேடி வந்தனர்.
இதனிடையே மனோகரனை பிடித்த போலீசார் அவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.இவர் மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி என பல வழக்குகள் உள்ளன. வழக்குகள் தொடர்பான நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாததால் இவர் மீது வாரண்ட் நிலுவையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.