கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை: அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைப்பு

குமரியில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனையை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

Update: 2021-10-23 15:00 GMT

குமரியில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனையை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

தமிழக அரசின் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் சார்பில் ஒவ்வொரு பண்டிகை காலத்திலும் சிறப்பு விற்பனை கண்காட்சிகள் நடத்தப்படும் வழக்கம்.

அதன்படி அடுத்த மாதம் 4-ஆம் தேதி நடைபெறவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று நாகர்கோவிலில் உள்ள கோ ஆப்டெக்ஸ் தலைமை அலுவலகத்தில் தீபாவளி சிறப்பு விற்பனை மற்றும் கண்காட்சி தொடங்கியது.

தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் ஆகியோர் தொடங்கி வைத்த இந்த கண்காட்சியில் தீபாவளி பண்டிகைக்கு 30 சதவீத தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மென் பட்டு புடவைகள் காஞ்சிபுரம், ஆரணி, தஞ்சை போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுப்புடவைகள், திருபுவனம் பட்டு புடவைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், போர்வைகள் உள்ளிட்ட பல்வேறு துணிகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்த கண்காட்சியில் வரும் தீபாவளி பண்டிகைக்கு 6 கோடி ரூபாய்க்கு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக கன்னியாகுமரி மாவட்ட கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் அறிவித்து உள்ளது.

Tags:    

Similar News