மிரட்டும் கோரோனா - காவல் நிலையத்திற்குள் செல்ல தடை.

பூதப்பாண்டி காவல் நிலைய வளாகத்தில் கயிறு கட்டப்பட்டு பொதுமக்கள் உள்ளே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது

Update: 2021-04-30 12:15 GMT

குமரி மாவட்டத்தில் கோரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் தொற்று தடுப்பு நடவடிக்கையாக காவல் நிலையங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டு பூதப்பாண்டி காவல் நிலையத்தில் பணியாற்றிய போலீசாருக்கு தொற்று ஏற்பட்டதால் இரண்டு முறை காவல் நிலையம் மூடப்பட்டது.

தற்போது கொரோனா தொற்று காரணமாக இறச்சகுளம் பகுதியில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து பூதப்பாண்டி காவல் நிலைய வளாகத்தில் சானிடைசர் வைத்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான வாசகங்கள் அடங்கிய அறிவிப்பு மக்களுக்கு தெரியும் படியும் வைக்கப்பட்டுள்ளது. மேலும் காவல் நிலைய வளாகத்தில் கயிறு கட்டப்பட்டு பொதுமக்கள் உள்ளே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முதல் புகார் மனு கொடுக்க வருபவர்களிடம் போலீசார் காவல் நிலையத்தின் வாசலில் நின்று மனுக்கள் பெற்று நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்

Tags:    

Similar News