குமரியில் அ.தி.மு.க. சார்பில் பொங்கல் சீர் வரிசை பொருட்கள் வினியோகம்..
Pongal Seer Varisai-குமரியில் அ.தி.மு.க. சார்பில் பொங்கல் சீர் வரிசை பொருட்களை சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் வழங்கினார்..
Pongal Seer Varisai-கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியில் அ.தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் சகாயராஜ் ஏற்பாட்டில் 64 ஏழை புதுமண தம்பதிகளுக்கு பாத்திரம், பலசரக்கு, கரும்பு, புத்தாடைகள் உள்ளடக்கிய பொங்கல் சீர்வரிசை பொருட்களும், 1000 ஏழைகளுக்கு இலவச வேஷ்டி சேலையும் வழங்கப்பட்டது.
இதனை அ.தி.மு.க. மாநில கழக அமைப்பு செயலாளரும் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய் சுந்தரம் பொதுமக்களுக்கு வழங்கினார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாகர்கோவிலில் 6 இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமூக இடைவெளியை கடைபிடித்து முக கவசம் அணிந்து கலந்து கொண்டவர்கள் சீர் வரிசை மற்றும் இலவச வேஷ்டி சேலையை பெற்று சென்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2