வழக்கமான குற்றவாளிகள் 5 பேர் மீது நன்னடத்தை பிணை வழக்கு பதிவு
கன்னியாகுமரி மாவட்டத்தில் வழக்கமான குற்றவாளிகள் 5 பேர் மீது நன்னடத்தை பிணை வழக்கு பதிவு செய்யப்பட்டது
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வருபவர்கள், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தவர்கள், சரித்திர பதிவேட்டு குற்றவாளிகள் மீது நன்னடத்தை பிணை வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இந்த நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டார். அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களில் 30 க்கும் மேற்பட்ட வழக்கமான குற்றவாளிகள் மீது நன்னடத்தை பிணை வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தொடர் நடவடிக்கையாக வழக்கமான குற்றவாளிகள், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தவர்கள், சரித்திர பதிவேட்டு குற்றவாளிகள் என 5 நபர்களுக்கு இன்று நன்னடத்தை பிணை நிறைவேற்றபட்டுள்ளது. இதன் மூலம் குற்றவாளிகளின் நடவடிக்கைகள் கட்டுக்குள் கொண்டு வந்து அவர்களை நல்வழி படுத்த முடியும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.