பிரசித்தி பெற்ற கோவிலில் 2 வது முறையாக கொள்ளை : போலீசார் விசாரணை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலான தேவி முத்தாரம்மன் கோவிலில் 2 வது முறையாக கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2021-07-14 11:00 GMT

நாகர்கோவில் அருகே வடலிவிளை பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற தேவி முத்தாரம்மன் கோவில்.2 வது முறையாக கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வடலிவிளை பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற தேவி முத்தாரம்மன் கோவில்.

இந்த கோவிலில் வழிபாடு செய்யும் பக்தர்கள் தங்கள் குறைதீர்க்கும் தெய்வமாக தேவி முத்தாரம்மனை வணங்கி வருகின்றனர். இந்நிலையில் இந்த கோவிலில் இரண்டாவது குறையாக கொள்ளை சம்பவம் அரங்கேறி உள்ளது.

அதன்படி கோவிலில் நித்திய வழிபாடுகளை முடித்து வீடு திரும்பிய பூஜாரி காலையில் வந்து பார்க்கும் போது கோவில் திறந்து இருப்பதையும், கோவிலில் இருந்த 10 பவுன் தங்க நகை ஆபரணங்கள் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் கொள்ளை போய் இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து கோவில் நிர்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடம் வந்த கோட்டார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த 3 மாதங்களுக்கு முன் கோவிலில் புகுந்த மர்ம நபர்கள் கோவில் உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்றது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News