வரதட்சணை கேட்டு இளம்பெண் கொடுமை - கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு

நாகர்கோவில் வரதட்சணை கேட்டு இளம்பெண் கொடுமை செய்யப்பட்டார். இதனையொட்டி அனைத்து மகளிர் போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Update: 2021-05-05 08:30 GMT

கன்னியாகுமரி மாவட்டம் அழகிய பாண்டியபுரம் காட்டுப்புதூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மகள் 26 வயதான பால முருகேஸ்வரி.

இவருக்கும் நெல்லை மாவட்டம் பணகுடி பகுதியைச் சேர்ந்த சிவபாலன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது 5 லட்சம் ரொக்கம் மற்றும் 100 சவரன் நகை கொடுத்துள்ளனர்.

ஆனால் திருமணம் முடிந்த பின்னரும் கூடுதலாக ரூபாய் 5 லட்சம் வரதட்சணை கேட்டு மகேஸ்வரியை கணவர் சிவபாலன், அவரது தந்தை சுந்தர்ராஜ், தாயார் பாலச்சந்திரா, சகோதரர் செந்தில்குமார் ஆகியோர் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இது குறித்து நாகர்கோவில் மகிளா நீதிமன்றத்தில் பாலமுருகேஸ்வரி வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் சிவபாலன் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

Similar News