காஞ்சிபுரம் : குடிநீர் கேட்டு சாலை மறியலுக்கு முயன்ற பொதுமக்கள்

பாதுகாப்பான குடிநீர் வழங்கக்கோரி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-12-11 10:15 GMT

காலி குடங்களுடன், சாலை மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்கள். 

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ளது வளத்தீஸ்வரன் கோயில் தோப்பு தெரு. இங்கு, கடந்த இரண்டு மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி, ஆட்சியர் அலுவலகம் , நகராட்சி அலுவலகம் என பல முறை புகார் கொடுத்துள்ளனர் .

புகாரின் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தினால்,  இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலன் கேட் பகுதியில்,  அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள்,  ஆண்கள் காலி குடங்களுடன் காஞ்சிபுரம்- வந்தவாசி சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த,  விஷ்ணு காஞ்சி போலீசார்,  போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினர். மேலும், நகராட்சி ஊழியர்களை அழைத்து பேசி அவர்கள் உறுதியளித்ததை தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் ஆட்சியர் அலுவலக சாலை சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News