காஞ்சிபுரத்தில் மின் தடைக்கு காரணமான அணில்களை பிடிக்க வலியுறுத்தி, பா.ஜ.க கலெக்டரிடம் மனு

காஞ்சிபுரத்தில் ஏற்படும் மின் தடைக்கு காரணமான அணில்களை பிடிக்க வேண்டும் எ்னறு கேட்டு பா.ஜ.கவினர் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.

Update: 2021-06-23 08:15 GMT

காஞ்சிபுரத்தில் மின் தடைக்கு காரணமான அணில்களை பிடிக்க வலியுறுத்தி கலெக்டரிடம் மனு அளிக்க வந்த பா.ஜ.கவினர்.

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக அடிக்கடி மின்தடை  ஏற்பட்டு வருகிறது . இந்நிலையில் தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்கள் சந்திப்பில் மின்தடைக்கு அணில் ஒரு காரணமாக விளங்குகிறது என கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் காஞ்சிபுரம் நகர பாஜக தலைவர் அதிசயம் குமார்  தலைமையில் பாஜகவினர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் மனு ஒன்றை செலுத்தினர்.

இம்மனுவில் ,  தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டு ஏற்படுவதற்கு காரணம் அணில்கள் தான் என்று தமிழ்நாடு மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார் .

இதனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்படும் மின்வெட்டுக்கு காரணம் அணில்களாதான் தான் இருக்ககூடும் என்று தோன்றுகிறது.

ஆகையால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுற்றித்திரியும் அணில்களை பிடித்து வனத்துறையினர் ஒப்படைக்க வேண்டும்  என வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது .

Tags:    

Similar News