கோடாலி கொண்டை அலங்காரத்தில் வரதராஜ பெருமாள்.!

புரட்டாசி மாத நான்காவது சனிக்கிழமையை யொட்டி ஏராளமான பக்தர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-10-12 11:45 GMT

புரட்டாசி மாதம் நான்காவது சனிக்கிழமை ஒட்டி காஞ்சி வரதராஜ பெருமாள் கண்ணாடி அறையில் கோடாலி கொண்ட அணிந்து காட்சியளித்த போது

புரட்டாசி மாதம் நான்காம் சனிக்கிழமையை ஒட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளை மழையினையும் பொருட்படுத்தாமல் தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள் கூட்டம்.ஓரு மணி நேரத்திற்கு மேல் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான, உலகப் பிரசித்தி பெற்ற அத்தி வரதர் கோவில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி மாதம் நான்காம் சனிக்கிழமை ஒட்டி சுவாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.

புரட்டாசி மாத சனிக்கிழமை ஒட்டி அத்திகிரி மலையில் உள்ள மூலவர், உற்சவர், வரதராஜ பெருமாளுக்கு மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்து தீப தீப ஆராதனைகள் செய்து நெய் தீப விளக்கு வெளிச்சத்தில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

புரட்டாசி மாத நான்காம் வார சனிக்கிழமை ஒட்டி சுவாமி தரிசனம் செய்வதற்காக உள்ளூர் வெளியூர் வெளிமாநிலம் என பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் வளாகத்தில் ஓரு மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து வரதராஜ பெருமாளையும் பெருந்தேவி தாயாரையும் சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டனர்.

மேலும் கண்ணாடி அறையில் ஸ்ரீ தேவி பூதேவியுடன் , கோடாலி கொண்டை அலங்காரத்தில் எழுந்தருள சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

கோவில் வளாகத்தில் உள்ள சக்கரத்தாழ்வார் சன்னதி, அத்தி வரதர் துயில் கொள்ளும் அனந்தசரஸ் திருக்குளத்தையும் பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு மகிழ்ச்சியுடன் சென்றனர்.

Tags:    

Similar News