காஞ்சிபுரத்தில் பெண் பேராசிரியர் மர்ம மரணம், கொலையா, யார் காரணம், போலீசார் விசாரணை

காஞ்சிபுரத்தில் பெண் பேராசிரியர் மர்மமான முறையில் இறந்தார். இது கொலையா, யார் காரணம் என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Update: 2021-07-10 07:30 GMT

காஞ்சிபுரத்தில் பெண் பேராசிரியர் மர்மமான முறையில் இறந்தார். இது கொலையா ? 

காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை அங்காளபரமேஸ்வரி நகரில் வசிப்பவர் வெள்ளைச்சாமி. இவர் தனது மனைவி, மகள், மனைவியின் தங்கை அனிதா உடன் கடந்த 15 ஆண்டுகளாக இப்பகுதியில் வசித்து வருகிறார்.

அனிதா காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் பேராசிரியரையாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் அனைவரும் உணவு சாப்பிட்டனர். 

பின்னர் அனிதா மேல்மாடியில் உள்ள தனது அறைக்கு சென்று உள்ளார். இரவு பதினோரு மணியளவில் மேல்மாடியில் சத்தம் கேட்டதை தொடர்ந்து அனைவரும் மாடிக்கு  சென்ற பார்த்தபோது மாடி கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.

உடனடியாக செல்போன் மூலம் தொடர்பு கொண்டபோது அனிதா பதற்றமாக பேசியுள்ளார். இதனைத் தொடர்ந்து அனைவரும் பக்கத்து வீட்டு மாடி வழியாக மேல் மாடிக்கு சென்று பார்த்தபோது அறையை உள்பக்கமாக பூட்டி  இருந்தது.

ஜன்னல் வழியாக பார்க்கும்போது மெத்தையில் சுயநினைவற்ற நிலையில் அனிதா இருந்ததைக் கண்டு கதவு உடைக்கப்பட்டு 108 அவசர ஊர்தி மூலம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்ததைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பாக தாலுக்கா காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில் அனிதா மரணம் குறித்து  சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் காஞ்சிபுரம் தாலுகா காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News