மோடி பிறந்த நாளையொட்டி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு பராமரிப்பு பொருட்கள்

மோடி பிறந்த நாளையொட்டி காஞ்சிபுரம் மகப்பேறு பிரிவில் உள்ள 110 குழந்தைகளுக்கு பராமரிப்பு பொருட்கள் வழங்கப்பட்டது.

Update: 2024-09-17 12:45 GMT

பிரதமர் மோடியின் 75 வது பிறந்த தினத்தையொட்டி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு பராமரிப்பு பொருட்களை பாஜகவினர் வழங்கினர்.

பாரதப் பிரதமர் மோடியின் 75 வது பிறந்த நாளையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட பாஜக மற்றும் காஞ்சி மேற்கு மண்டலம் சார்பில் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் உள்ள 110 குழந்தைகளுக்கு பராமரிப்பு பொருட்கள் வழங்கப்பட்டது.

பாரதப் பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாள் விழா இன்று இந்தியா முழுவதும் உள்ள பாஜக தொண்டர்களால் கொண்டாடப்பட்டது.


இந்த பிறந்த நாளில் காஞ்சிபுரம் மாவட்ட பாஜக சார்பில் பல்வேறு நல திட்ட உதவிகள் வழங்க முடிவு செய்யப்பட்டு அதன் படி காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரம் உத்திரமேரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரதமர் மோடியின் பிறந்தநாள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட பாஜக மற்றும் காஞ்சிபுரம் மேற்கு மண்டல பாஜக சார்பில் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் உள்ள குழந்தைகளுக்கு பராமரிப்பு பொருட்களை மாவட்ட தலைவர் பாபு, மாவட்ட பார்வையாளர் பாஸ்கரன், மேற்கு மண்டல தலைவர் ஜீவானந்தம் உள்ளிட்டோர் வழங்கி குழந்தைகளை  வாழ்த்தினர்.


மேலும் காஞ்சிபுரம் மாநகரம் சார்பில் அன்னதான நிகழ்வுகளும் நடைபெற்றன.

இந்நிகழ்வில் மாவட்டத் துணைத் தலைவர் ஜம்போடைசங்கர் செயலாளர் செந்தில் அனந்தபாபு மற்றும் மேற்கு மண்டல பகுதி நிர்வாகிகள் யுவராஜ் ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News