கண்ணைக்கட்டி விளையாட்டு : ஒரு பெண்ணின் சாதனை

சாதனை செய்வதற்கு வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் பெண் 155 அடி மலையை கண்களை கட்டி இறங்கி சாதனை.

Update: 2021-03-07 10:00 GMT

சாதனை செய்வதற்கு வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் திருமணமான பெண் முத்தமிழ்செல்வி 155 அடி உயரமுள்ள மலையை கண்களை கட்டிக்கொண்டு இறங்கி சாதனை படைத்துள்ளார்.

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மலைப்பட்டு பகுதியில் 155 உயரமுள்ள மலையின் மேலிருந்து கண்களை கட்டிக் கொண்டு 58 வினாடிகளில் கீழே இறங்கி மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்த முத்தமிழ் செல்வி வயது 32 உலக சாதனை படைத்தார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகசாதனை படைத்த முத்தமிழ் செல்வி கூறுகையில் , 'இந்த சாதனையை மகளிர் தினத்தை முன்னிட்டு செய்தேன்.   மகளிர் நினைத்தால் எதுவும் சாதிக்க முடியும். ஆனால், ஆண்கள்  கண்களை திறந்து பெண்களை பார்க்கவேண்டும்.கண்களை மூடிக்கொண்டு பெண்களுக்கெதிரான வன்முறைகளை செய்கிறார்கள். இதை வலியுறுத்தி தான் இந்த சாதனையை செய்தேன்.' இவ்வாறு அவர் கூறினார்.

ஒரே வாரத்தில் பயிற்சி பெற்று இந்த சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது. யூனிக்கோ வேர்ல்ட் ரெகார்ட் சார்பாக உலக சாதனை படைத்த இளம்பெண் முத்தமிழ் செல்விக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. சாதனை செய்வதற்கு வயது ஒரு தடையில்லை என்பதற்கு இவரும் ஒரு உதாரணம்.

Tags:    

Similar News