ஈரோடு: சமூக நலத்துறையின் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்

ஈரோடு மாவட்டத்தில் சமூக நலத்துறையின் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்.

Update: 2022-07-19 04:00 GMT

பைல் படம்

ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய வாய்ப்பு 

தமிழக அரசின் சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பல்நோக்கு உதவியாளர், தொழில் நுட்ப நிர்வாகி, இரவு காவலர் (பெண்) ஆகிய பணியிடங்களுக்கு, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களை, www.erode.nic.in என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம். வரும் ஆகஸ்ட் 10ம் தேதி மாலை 5 மணிக்குள், மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், ஆறாவது தளம், ஈரோடு - 638011 என்ற முகவரியில், விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு 0424-2261405 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Similar News