அந்தியூர் வட்டாரத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி, அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் விஜயகுமார் தேசியக்கொடியை ஏற்றினார்.

Update: 2022-08-15 02:15 GMT

அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

இன்று, இந்திய திருநாட்டின் 75ஆம் ஆண்டு சுதந்திர தின விழா நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதில் வட்டாட்சியர் விஜயகுமார் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அலுவலகத்தில் வைக்கப்பட்ட காந்தியின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார். இந்த சுதந்திர நிகழ்ச்சியில், அந்தியூர் நில வருவாய் ஆய்வாளர் சுதாகர், வருவாய்த் துறையினர் கிராம நிர்வாக அதிகாரிகள் மற்றும் அரசு சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


இதேபோல், அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் , பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள் மற்றும் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பஞ்சாயத்துகளில் அந்தந்த பஞ்., தலைவர்கள் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினர்.

Similar News