'குவாட்டர் வாங்கினால், அம்மா உணவகத்தில் இட்லி கூட வாங்க முடியாது' - முன்னாள் அமைச்சர் தொண்டர்களுக்கு அட்வைஸ்

சத்தியமங்கலத்தில் நேற்று இரவு நடந்த பொதுக்கூட்டத்தில், மதுபோதையில் குத்தாட்டம் போட்ட தொண்டர்களை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், நகைச்சுவையாக பேசி கேலி செய்தார்.

Update: 2022-09-22 10:30 GMT

செங்கோட்டையன் முன்னிலையில், மதுபோதையில் குத்தாட்டம் போட்ட அதிமுக தொண்டர்கள்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அரியப்பம்பாளையத்தில், அதிமுக சார்பில், அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நேற்றிரவு நடந்தது. இதில் மேடைக்கு முன்பாக தொண்டர்கள் சிலர் மதுபோதையில், விசில் அடித்து குத்தாட்டம் போட்டனர். அப்போது பொதுக்கூட்ட மேடையில் பேசிக்கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அவர்களை பார்த்து, ' நீங்கள் இப்படி தொந்தரவு செய்தால், என்னால் தொடர்ந்து பேச முடியாது. இப்படி நீங்கள் வாங்கும் சம்பளத்தை வீட்டிற்கு கொடுக்காமல், குவாட்டர் போட்டுக்கொண்டு ஆடினால், அம்மா உணவகத்தில் இட்லி கூட வாங்க முடியாது, என நகைச்சுவையாக பேசி கேலி செய்தார்.

Similar News