காலிங்கராயன்பாளையம் அனைத்து வணிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்

Erode news- ஈரோடு மாவட்டம் பவானி அருகே காலிங்கராயன்பாளையம் அனைத்து வணிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.

Update: 2024-04-29 10:15 GMT

Erode news- காலிங்கராயன்பாளையம் அனைத்து வணிகர்கள் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் நிர்வாகிகள் குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்ட போது எடுத்த படம்.

Erode news, Erode news today- பவானி அருகே காலிங்கராயன்பாளையம் அனைத்து வணிகர் சங்க பொதுக்குழுக் கூட்டம் நடந்தது.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள காலிங்காயன்பாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் காலிங்கராயன்பாளையம் அனைத்து வணிகர்கள் சங்கம் பொதுக்குழுக் கூட்டம் மற்றும் மாநாட்டு விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம், சங்கத் தலைவர் சி.ஞானசேகர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், சங்கச் செயலாளர் எம்.சரவணகுமார் வரவேற்புரை ஆற்றினார். சங்கத் துணைத் தலைவர் எச்.ஞானராஜ் ஆண்டறிக்கை வாசித்தார். சங்க பொருளாளர் எம்.குழந்தை ராஜன் ஆண்டு வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்தார்.

சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ஈரோடு மாவட்ட தலைவர் இரா.க.சண்முகவேல், மாவட்ட செயலாளர் பொ.இராமச்சந்திரன், மாவட்ட பொருளாளர் உதயம் பி.செல்வம் , மாநில துணைத்தலைவர் பி.திருமூர்த்தி, மாவட்டத் துணைத் தலைவர் வேலா பி.எஸ்.சுந்தர்ராஜன், மாவட்ட இளைஞரணி செயலாளர் அ.லாரன்ஸ் ரமேஷ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் எஸ்கேஎம் பாலகிருஷ்ணன், ஈரோடு மாநகர பொருளாளர் ஏ.ஆர்.சாதிக் பாஷா ஆகியோர் கலந்து கொண்டனர் .

இக்கூட்டத்தில், மதுரையில் நடைபெற இருக்கும் 41வது வணிகர் தின மாநாடு குறித்து விளக்கயுரை ஆற்றப்பட்டது. இதில், பவானி வட்டார பேரமைப்பு நிர்வாகிகள் மற்றும் பவானி நகர அனைத்து வணிகர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இறுதியில் சங்கச் துணைச் செயலாளர் பூபதி ராஜா நன்றியுரை ஆற்றினார்.

Tags:    

Similar News