28-வது முறையாக 100 அடியை எட்டியது பவானிசாகர் அணை

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் நண்பகல் 12 மணி நிலவரப்படி 100 அடியை எட்டியது.

Update: 2022-07-28 06:15 GMT

28-வது முறையாக 100 அடியை எட்டியது பவானிசாகர் அணை.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம்  இன்று நண்பகல் 12 மணி நிலவரப்படி 100 அடியை எட்டியது.‌ தற்போது, பவானிசாகர் அணைக்கான நீர் வரத்து 2,327 கன அடியாக உள்ளது. அணையிலிருந்து  உபரிநீர் திறக்கப்பட மாட்டாது எனவும், மேலும், அணையின் நீர்மட்டத்தை உயர்த்தி வருங்காலத்தில் பாசனத்திற்காக நீரை பயன்படுத்த என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், தற்போது பவானி ஆற்றில் குடிநீருக்கு 100 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News